சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
x
* திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கிராமங்களில்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள்  சாம்பட்டி சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், கடந்த 8 ஆண்டுகள் சரி செய்ய வலியுறுத்தியும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தம்பிதுரையிடம் என்று கூறினர். 

* அப்போது, இது குறித்து இளைஞர்களிடம் கேட்ட ஆட்சியருக்கும் - இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சாலை சரி செய்யப்படும் என்று கூறி இளைஞர்களை அனுப்பி வைத்த தம்பிதுரை ஆட்சியரை அடுத்த பகுதிக்கு அழைத்து சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்