டிஎன்பிஸ்சி தேர்வுகளின் முடிவுகள் வெளியீடு
782 பணியிடங்களுக்கான 4 தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஸ்சி நேற்று வெளியிட்டது.
ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட நான்கு வகை தேர்வுகள் மூலம், 782 பேர் பணி நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், இதன் முடிவுகளை டிஎன்பிஸ்சி நேற்று மாலை வெளியிட்டது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலையும் டிஎன்பிஸ்சி வெளியிட்டது. தேர்வெழுதியவர்கள், டிஎன்பிஸ்சி இணையத்தில் முழுமையான விபரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 782 பேரும், அடுத்த இரு மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Next Story