பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு : மக்கள் வேதனை

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வைக் கண்டுள்ளதால், அவற்றை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு  : மக்கள் வேதனை
x
கடந்த 2 வாரமாக, பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதே இந்த அதீத விலையேற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

சென்னையில், நேற்று 85 ரூபாய் 31 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 10 காசுகள் உயர்ந்து 85 ரூபாய் 41 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

இதேபோல டீசலின் விலையும் 10 காசுகள் உயர்ந்துள்ளது. நேற்று 78 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், இன்று 78 ரூபாய் 10 காசுகளுக்கு விற்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்