மணமக்களுக்கு மிக விலை உயர்ந்த பெட்ரோல் பரிசு

கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.
மணமக்களுக்கு மிக விலை உயர்ந்த பெட்ரோல் பரிசு
x
பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தை சேர்ந்த பிரபு என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது. அப்போது, சக ஆட்டோ ஓட்டுநர்கள், நண்பர்கள் இணைந்து, 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்துள்ளனர். 

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மணமகன் பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்த பரிசு அவருக்கு உதவும் என சக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர். 



மணமக்களுக்கு மிக விலை உயர்ந்த பெட்ரோல் பரிசு - புதுமண தம்பதியின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் 


கடலூர் மாவட்டம் குமாராட்சி கிராமத்தில் நடந்த இளஞ்செழியன்- கனிமொழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, நண்பர்கள் மிக விலை உயர்ந்த பெட்ரோலை பரிசாக கொடுத்து அசத்தினர். இதனை வியப்பு கலந்த ஆச்சரியத்துடன் பார்த்த திருமணத்திற்கு வந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். 




Next Story

மேலும் செய்திகள்