பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை பரங்கிமலையில் பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
பார்வையற்ற மகனை கொலை செய்து நாடகமாடிய தாய் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
x
* பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்த பத்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

* இந்நிலையில் நேற்று முன்தினம் பார்வையற்ற தனது மகன் பரத், மயங்கி கிடப்பதாக கூறி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பத்மா கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

* ஆனால் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார், பத்மாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். கணவருடன் பிரிந்து வாழ்ந்த விரக்தியில் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அவர் கூறியுள்ளார். 

* முதலில் பார்வையற்ற 13 வயது மகனின் கழுத்தை பிளாஸ்டிக் பையால் மூடி நெறித்தாகவும், பின்னர் அதேமுறையில் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். 

* ஆனால் தனது தற்கொலை முயற்சி தோல்வி அடைந்ததால்,  மயங்கி கிடந்த மகனை காப்பாற்றி விடலாம் என நினைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் பத்மா தெரிவித்துள்ளார். இதனையடுத்து பத்மாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்