பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.

7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.
x
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் 7 பேருக்கும் தனித்தனியே கோப்புகள் தயார் செய்து, தமிழக அரசு தனது பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 

இந்நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்