27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரன் : விடுவிக்க கோரி தாய் கடிதம்

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை விடுவிக்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரன் : விடுவிக்க கோரி தாய் கடிதம்
x
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை விடுவிக்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ரவிச்சந்திரனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 27 ஆண்டுகளில் 43 நாட்கள் மட்டுமே அவர் பரோலில் வந்துள்ளதாகக் கூறியுள்ள ராஜேஸ்வரி இன்னும் அவருக்கு திருமணம் கூட செய்து வைக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்தை ஆளுநர்,முதலமைச்சர், தமிழக சிறைத் துறைத் தலைவர், உள்ளிட்டோருக்கு பதிவுத் தபால் மூலம் ரவிசந்திரனின் தாய் ராஜேஸ்வரி அனுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்