35 இடங்களில் அதிரடி சோதனை : சிபிஐ விளக்கம்

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அறிவித்துள்ளது.
35 இடங்களில் அதிரடி சோதனை : சிபிஐ விளக்கம்
x
குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக குட்கா தயாரித்தல், இறக்குமதி செய்தல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லுதல், விற்பனை ஆகியவை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் எந்த விதத்திலும் குட்கா தமிழகத்தில் பயன்படுத்தப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து விற்பனை நடைபெற்றதாகவும் சிபிஐ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்