"வாக்குவாதம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழிசை

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.
வாக்குவாதம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை
x
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் விமான நிலையத்தில் இளம் பெண் ஒருவர், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பெண் போலீசார், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை, சமாதானம் செய்தனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், விமானத்தில் தமது இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த இந்த இளம் பெண்,
பாஜகவை விமர்சித்ததாக புகார் தெரிவித்தார். எனவே, தம்மிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்