வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், 
மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் வருவாய் துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, பருவமழையை எதிர் கொள்ள தயாராக உள்ளதாகவும், வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்