பெற்ற குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த தாய்...

கோவையில், பெற்ற குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த தாய்...
x
கோவை, சரவணம்பட்டியில் வசித்து வந்த கார்த்தி-வனிதா தம்பதிக்கு, சசிப்பிரியா என்ற 2 வயது குழந்தையும், கவிஸ்ரீ என்ற 3 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தான் குப்பை கொட்டுவதற்காக வெளியே சென்று திரும்பிய போது, கவிஸ்ரீயை காணவில்லை என வனிதா, கணவர் கார்த்தியிடம் கூறியுள்ளார். பீரோவில் இருந்த 500 ரூபாய் பணமும் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீனிவாசன் என்பவருடன் சேர்ந்து கவிஸ்ரீயை கழுத்தை நெறித்து வனிதா கொலை செய்து குப்பைமேட்டில் வீசியது தெரிய வந்தது. கள்ளக் காதலால் குழந்தையை கொலை செய்த வனிதா, ஸ்ரீனிவாசன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததாக பெற்ற குழந்தையை, தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்