புதிய இந்தியா பிறந்து விட்டதா? - 29,000 கி.மீ. காரில் பயணித்து உறுதி செய்யும் பெண்மணி

வழிநெடுகிலும் சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக சங்கீதா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
புதிய இந்தியா பிறந்து விட்டதா? - 29,000 கி.மீ. காரில் பயணித்து உறுதி செய்யும் பெண்மணி
x
காந்தியடிகள் சொன்னது போல சுத்தம், சுகாதாரம் கொண்ட புதிய இந்தியா பிறந்துவிட்டதா என்பதை அறிய கோவையை சேர்ந்த சங்கீதா ஸ்ரீதர் என்பவர் மும்பையில் இருந்து நாடு முழுவதும் 29 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் பயணித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி மும்பையில் தொடங்கிய இந்த பயணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி காந்தி சமாதியில் முடிக்க உள்ளதாக அவர் கூறினார். வழிநெடுகிலும் சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்