நீர்நிலைகளில் மூழ்கி இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டம், ரெட்டியூரில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேர் மற்றும் மதுரை மாவட்டம், கீழையூரில் குவாரியில் மூழ்கி இறந்த 2 பேர் என 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நீர்நிலைகளில் மூழ்கி இறந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
சேலம் மாவட்டம், ரெட்டியூரில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேர் மற்றும் மதுரை மாவட்டம், கீழையூரில் குவாரியில் மூழ்கி இறந்த 2 பேர் என 6 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரெட்டியூர் அருகே காவிரியாற்றில்  காணாமல் போன ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்ததும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க, ஆறு மற்றும் ஏரிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் தனது அறிக்கையில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்