சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்
சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்
x
உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு  சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வேல்ஸ் பல்கலக்கழக துணை வேந்தர் ஐசரிவேலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த எம்.ஜி.ஆர் பேரவை நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டினார். 

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர்என்றும், கர்ணனை போல் கொடை வள்ளலாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்றும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்