ராமநாதபுரத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயது சிறுவன்

ராமநாதபுரத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு 12 வயது சிறுவன் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயது சிறுவன்
x
ராமநாதபுரத்தை அடுத்த இடையர் வலசை கண்மாய் பகுதிக்குள் 12 வயது சிறுவன் ஒருவன் நீண்ட நாட்களாக ஆடு மேய்ப்பதாக "Child Line" அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் சார்பு வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சிறுவனை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம் , பேராவூரணி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரது மகன் என்பது தெரிய வந்தது.  ராமநாதபுரத்தை அடுத்த இடையர்வலசு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் 1 லட்சம் ரூபாய் பணத்திற்கு தன்னை விலைக்கு வாங்கி ஆடு மேய்க்க வைத்ததாக கண்ணீருடன் சிறுவன் அதிகாரிகளிடம் தெரிவித்தான். குழந்தைகள் கடத்துவதாக பல இடங்களில் , வடமாநில இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு மத்தியில், பெற்றோர்களே தங்களது குழந்தைகளை பணத்திற்காக விற்கும் இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.


Next Story

மேலும் செய்திகள்