தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

பி.சி.சி.ஐ.யின் புதிய சட்ட விதிமுறைகளை ஏற்காமல் இருந்த காரணத்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
x
பி.சி.சி.ஐ.யின் புதிய சட்ட விதிமுறைகளை ஏற்காமல் இருந்த காரணத்தால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தேர்தலை நடத்த அனுமதிகோரி  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது. தகுதி உறுப்பினர், நிர்வாகி தகுதி நீக்கம் உள்ளிட்டவை கிரிக்கெட் நிர்வாக குழு வகுத்த புதிய விதிமுறைகளுக்கு உள்பட்டு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேபோல், தேர்தல் முடிவுகள் அனைத்தும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு உட்பட்டது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்