டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது , முதல் போட்டியில் தோல்வியை தழுவிய போதிலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இந்நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது , ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை சேர்த்தது அந்த அணி, பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி வரை போராடி 114 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது , கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் கோப்பையை வென்ற நிலையில் தற்போது 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

Next Story

மேலும் செய்திகள்