"நியாய் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர்" - அபிஜித் பானர்ஜிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து

'நியாய்' திட்ட எண்ணம் மனதில் உதித்த போது, அதற்கு வடிவம் தர பேருதவி செய்தவர் அபிஜித் பானர்ஜி, என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நியாய் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தவர் - அபிஜித் பானர்ஜிக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
x
'நியாய்' திட்ட எண்ணம் மனதில் உதித்த போது, அதற்கு வடிவம் தர பேருதவி செய்தவர் அபிஜித் பானர்ஜி, என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் தளத்தில் அவர் குடும்பத்தினர் வாயிலாக வெளியிட்டுள்ள பதிவில், அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதார துறையில் நோபல் பரிசு கிடைத்திருப்பது தம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்திருந்தால் 'நியாய்' திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றியிருப்பேம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.  ஆட்சிக் காலத்தில் வறுமை கூடியிருப்பதை நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சுட்டிக் காட்டி உள்ளதாகவும் ப.சிதம்பரம் தமது பதிவில் கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்