"குடிநீருக்கான நிதியை குப்பை தொட்டிக்கு செலவிட்டார்கள்"- அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

குடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நிதியை, அதிமுக அரசு குப்பை தொட்டிக்காக‌ செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
x
குடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நிதியை, அதிமுக அரசு குப்பை தொட்டிக்காக‌ செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திமுக பொருளாளர் துரை முருகன் இன்று திறந்து வைத்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை முருகன், தேர்தலுக்கு பின் அதிமுக நிலை குலைந்து போயுள்ளதாகவும், அதனால், அமைச்சர்களுக்கு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்