சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...
x
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். தங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு பேசினார். குதிரை பேரம் மூலம், 23 எம்.எல்.ஏ.,க்களை, சந்திரபாபு நாயுடு, தம்மோடு இணைத்துக்கொண்டது குறித்து இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியது கட்சியினரிடையே கலகலப்பை ஏற்படுத்தியது. தாங்கள் செய்த பாவம், தங்களையே தாக்கும் என்பதற்கு, இது ஒரு உதாரணம் என நகைப்புடன் தெரிவித்தார். அதேபோல், தற்பொழுது வெற்றி பெற்றிருப்பது மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றும், நல்ல முறையில் பணியாற்றி 2024 ஆண்டு தேர்தலிலும் இதேபோன்ற ஒருவெற்றியை மக்களிடம் பெற உழைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களிடம் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்