ஸ்டாலின் தங்கவிருக்கும் தனியார் விடுதியில் சோதனை...

கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரின் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை.
x
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் கட்சியினரின் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  பணப்பட்டுவாடா செய்வதாக,  கட்டுப்பாட்டு அறைக்கு  வந்த தகவலை அடுத்து அதிகாலை முதல் தீவிர சோதனை செய்து வருகின்றனர். தூத்துக்குடி சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த விடுதியில் தான் ஓய்வெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விடுதிக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் வருகை புரிந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்