கருணாஸ், தமிமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படாது - அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்

கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இல்லை என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
x
எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இல்லை என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அரியலூர் பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குறிப்பிட்டார்.  தொலைக்காட்சியில் வந்த ஆதாரங்கள் அடிப்படையில் மூன்று எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாகவும் கொறடா ராஜேந்திரன் தெரிவித்தார். கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்பட்ட ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்