மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
x
தோல்வி பயத்தின் காரணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் அரசு மீது, எதிர்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தெரிவித்தார். ஏழை குடும்பங்களுக்கு, இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளில் 305 கோடி ரூபாய் அளவிற்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தோல்வி பயம் காரணமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரசாரம் செய்வதாக குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்