ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கமல்ஹாசன்

காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்
x
மக்களுடனான தொடர்பு அரசியல் வாதிகளுக்கு தற்போது அற்றுபோய்விட்டது என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார். மயிலாடுதுறையில்  தமது கட்சி வேட்பாளர் ரிபாயுதீனை ஆதரித்து சின்னகடைவீயில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.  தமிழகத்தை கொல்லைபுறமாக ஆள மத்திய அரசு முயற்சிசெய்வதாக குற்றஞ்சாட்டிய கமல்ஹாசன், மக்களை காண, தாம் தாமதமாக வந்துவிட்டடேன் என்று நினைப்பதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்