"பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு வருத்தம்" - கே.எஸ். அழகிரி

விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காலி நாற்காலிகளை படமெடுத்ததாக கூறி பத்திரிகையாளரை சிலர் தாக்கிய சம்பவத்திற்கு கே.எஸ். அழகிரி வருத்தம் தெரிவித்தார்.
x
விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காலி  நாற்காலிகளை படமெடுத்ததாக கூறி  பத்திரிகையாளரை சிலர் தாக்கிய சம்பவத்திற்கு  கே.எஸ். அழகிரி வருத்தம் தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், கன்னியாகுமரி மற்றும் தேனி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிகளவில்  பணம் கொடுக்கப்படுவதாகவும், அதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாகவும் அழகிரி குற்றம் சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்