"ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிவிட முடியாது"- அமைச்சர் காமராஜ்

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு ஆதரவு கேட்டு, அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
x
திருவாரூர் அருகே கீழமணலி பஞ்சாயத்துக்குப்பட்ட சேந்தனாங்குடி, காரநாதன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திரூவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்துக்கு ஆதரவு கேட்டு, அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதாவை போல் மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஒட்டு கேட்பதால் அவர் ஜெயலலிதா ஆகிவிட முடியாது என்றார். அவரது இந்த முயற்சி தோல்வியில் தான் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்