"ரூ.40 ஆயிரம் கோடியை கடலுக்குள் போட்டது திமுக" - பன்னீர்செல்வம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
x
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வருவதாக கூறி, 40 ஆயிரம் கோடி ரூபாயை திமுக, கடலுக்குள் போட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஸ்டாலினும், தினகரனும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்