"அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு, வாழ்வா சாவா என்ற சூழலில் நடக்கும் முக்கியமான தேர்தல் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் அறிமுக கூட்டம் தியாகதுருகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அரசியல் களத்தை திருப்பி போடும் என்றார். ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட முரசு சின்னம் வரையவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வினர் தங்களின் வீடுகளில் முரசு சின்னம் வரைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கருத்து வேறுபாடுகளை மறந்து அ.தி.மு.க. கூட்டணியினர் பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்