பெட்டியை சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் கண்ணும் கருத்துமாக பணியாற்றவேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
x
நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் தங்கமணி,  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் காளியப்பனை  அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வாக்குச்சாவடி ஊழியர்கள் அரசின் மீது கோபத்தில் இருப்பதால்,  பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர்  கண்ணும் கருத்துமாக பணியாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்