"இடைத் தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

"தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் திமுக வெல்லும்"
x
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவதாக அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நாராயணசாமி, ஏற்கனவே, தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், இடைத் தேர்தலிலும் திமுகவே போட்டியிடும் எனவும் திமுக வெற்றி பெறும் எனவும் ஸ்டாலினிடம் கூறியதாக  தெரிவித்தார். திமுக கூட்டணியில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இடைத் தேர்தலில் திமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்