18 தொகுதி இடைத்தேர்தல் : அதிமுகவில் விருப்பமனு விநியோகம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து, 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
18 தொகுதி இடைத்தேர்தல் : அதிமுகவில் விருப்பமனு விநியோகம்
x
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து, 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, அதிமுக சார்பில் 18 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாலை 6 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி, கட்சியினர் ஆர்வமாகப் மனுப் பெற்றனர். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்டுவிட்டதால், கட்சியினர் மீண்டும் விருப்ப மனு அளிக்கத் தேவையில்லை என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்