ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை : கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்பு

பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை : கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்பு
x
நாகர்கோவிலில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி இன்று காலை சென்னை வருகிறார்.  ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று பேசும் அவர் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிறகு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் செல்கிறார். தொடர்ந்து கட்சியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டமே தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார கூட்டம்  என்பதால் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்