மிரட்டி அல்ல, திரட்டி கூட்டணி அமைத்து உள்ளோம் - தமிழிசை

யாரையும் மிரட்டி அல்ல, தமிழகத்தில் கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்துள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
வறுமை கோட்டுக்கு கீழ் 60 லட்சம் பேரை வைத்துள்ளார்களா என்று கே​ட்கும் ஸ்டாலின், தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட தி.மு.க.வுக்கு அதில் பங்கு இல்லை என்கிறாரா என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாநகர பகுதி மற்றும் அத்திமரப்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, அங்கு இருந்த பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து பேசும் போது, ஊழலால் ஆட்சியை இழந்த கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ் என்றும், யாரையும் மிரட்டி அல்ல, தமிழகத்தில் கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்