அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.
x
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்தனர். தமிழ்-ஆங்கிலம் இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை ராயப்பேட்டை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை சமர்ப்பிப்பு - ரவீந்திரன் துரைசாமி கருத்து



Next Story

மேலும் செய்திகள்