"ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை" - எம்.எல்.ஏ. கருணாஸ்

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்றும், அடுத்த தேர்தலில் மக்கள் எண்ணப்படி செயல்படுவேன் எனவும் சட்டப்பேரவையில் கருணாஸ் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்றும், அடுத்த தேர்தலில் மக்கள் எண்ணப்படி செயல்படுவேன் எனவும் சட்டப்பேரவையில் கருணாஸ் தெரிவித்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், 33 அமைச்சர்களும் ஆளுக்கொரு திட்டம் தந்தால் கூட பல திட்டங்கள், தனது தொகுதியில்  நிறைவேற்றப்படும் என்றார். அப்போது, குறுக்கிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தாங்கள் பாசப்புலிகள் என்று கருணாஸ் கூறுகிறார். ஆனால் ஒரு புலியுடன் அடைத்தால் அவர் பாசமாக இருப்பாரா என்பது தெரியும்" என கூறியதும் சபையில் சிரிப்பலை எழுந்தது. 

எந்த நிலையிலும் அதிமுக ஆட்சி கலைவதற்கு, தனக்கு உடன்பாடில்லை என்று எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்