"உட்கார்ந்து எப்படி மக்கள் பணி செய்ய முடியும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
x
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஊராட்சி தோறும் கூட்டங்கள் போட்டு கேலி பேசுவதையே திமுக தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளது என குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி  வலிமையாகவும், மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஓடி ஓடி மக்கள் பணி செய்தாலும் முடியாத இந்த காலத்தில் உட்கார்ந்து எப்படி பணி செய்ய முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்