"பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை" - ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
x
தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளதாக குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில்,  கடந்த நான்கே முக்கால் ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளா​ர்.

Next Story

மேலும் செய்திகள்