234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - சரத்குமார்

2019 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பலத்தை நிரூபிக்க சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில், தென் மண்டல மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார்,  மற்றும் ராதிகா சரத்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சரத்குமார்,  2019 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பலத்தை நிரூபிக்க சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்