தமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
x
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலி டவுனில் நடைபெற்றது.  கூட்டத்தில்  பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் பெருமைகளை எடுத்துரைத்தார். அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிய முதலமைச்சர், தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டார். திமுகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், 3 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவரான , ஸ்டாலின் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தற்போது மக்களை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்தார்.    பா.ஜ.க. காங்கிரசுடன் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்