திருவாரூர் இடைத்தேர்தல் : இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பகல் 11 மணிக்கு துவங்குகிறது.
திருவாரூர் இடைத்தேர்தல் : இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்
x
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நிர்மல்ராஜ், பணப்பட்டுவாடாவை தடுக்க, 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். திருவாரூர் தொகுதியில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் உரிய அனுமதி பெற்ற பிறகே கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்க முடியும் என நிர்மல் ராஜ் குறிப்பிட்டார். இந்நிலையில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து திருவாரூர் மாவட்ட எல்லை மற்றும் தொகுதி எல்லைக்குட்பட்ட 12 இடங்களில் வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்