"கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்களே முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
x
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் அதிமுக அம்மா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பிரசார பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மத்திய அரசிடமிருந்து தேவையான நிதிகளை பெறவே அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று வருவதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்களே முடிவு செய்வார்கள் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்