சத்துணவு திட்டத்திற்கான கொள்முதலில் ரூ. 2400 கோடி ஊழல்? "சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " - ஸ்டாலின் கோரிக்கை

சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சத்துணவு திட்டத்திற்கான கொள்முதலில் ரூ. 2400 கோடி ஊழல்? சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  - ஸ்டாலின் கோரிக்கை
x
பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சியில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்