பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி 24ம் தேதி போராட்டம் - வைகோ
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி சென்னையில் வரும் 24ம் தேதி போராட்டம் என வைகோ தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யாத மத்திய மாநில அரசுகள் மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் வரும் 24ம் தேதி நடத்தப்படும் போராட்டத்தில் திராவிடர் கழகமும் பங்கேற்கும் என தெரிவித்தார்.
Next Story