காஞ்சியில் திரையரங்கை முற்றுகையிட்ட அ.தி.மு.க. தொண்டர்கள்...

சர்க்கார் படத்தை தடை செய்யக் கோரி காஞ்சிபுரத்தில் திரையரங்குகளின் முன் அ.தி.மு.க.-வினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சியில் திரையரங்கை முற்றுகையிட்ட அ.தி.மு.க. தொண்டர்கள்...
x
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கு முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நீக்கக் கோரியும் சர்க்கார் திரைப் படத்தை தடை செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.  இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. போராட்டம் பற்றி தகவல் அறிந்த  விஜய் ரசிகர்கள்  பேனர்களை அகற்றியதால்  விரும்பத்தகாத சம்பவங்கள் எதும் நடைறெவில்லை என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்