இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை

தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என தமிழிசை வலியுறுத்தினார்
இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை
x
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் அமைப்பு,  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை வழங்க உள்ளது. இதற்காக அமெரிக்கா புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,  மருத்துவம், சமூகம், சவாலான சூழ்நிலையில் பணியாற்றும் தலைவர் என்ற அடிப்படையில், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இலங்கையில்  தமிழர்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், எந்தவிதத்திலும் தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது எனவும் தமிழிசை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்