எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்
x
சென்னை - நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் வருகிற 30 ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்த நடிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். மத்திய அரசு பிரதிநிதிகளை, அழைப்பது குறித்து, ஆலோசித்து வருவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்