"7 பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்க திட்டம்" - திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை:  ஆளுநரை சந்திக்க திட்டம் - திருமாவளவன்
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். வரும் டிசம்பர் 10 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாட்டை நடத்த உள்ளதாகவும், இதில் பங்கேற்க காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்