ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தும் கேட்கப்படும் - கடம்பூர் ராஜூ

ராஜீவ் காந்தி கொலையின் போது பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தும் கேட்கப்படும் - கடம்பூர் ராஜூ
x
* ராஜீவ் காந்தி கொலையின் போது பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேரூராட்சி பகுதியில், 62 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் உள்ளிட்ட திட்ட பணிகளை, அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இனாம்மணியாச்சி வேளாண் கூட்டுறவு வங்கியில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவியையும் அவர் வழங்கினார். 

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ராஜீவ் காந்தி கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும், 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்