கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது என்ன..? - ஸ்டாலின் கேள்வி

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது என்ன என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது என்ன..? - ஸ்டாலின் கேள்வி
x
விழுப்புரத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமிஜெகதீன், மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில்,  பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி, 5 பேர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,  அதிமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது என்ன என அவர் கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்