பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவாரா? - திமுக தலைவருக்கு அழகிரி கேள்வி

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவாரா? - திமுக தலைவருக்கு அழகிரி கேள்வி
x
சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இந்த பேரணி தொடங்கியது. மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி சென்ற இந்த பேரணியில் அழகிரி ஆதரவாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  பேரணியின் நிறைவில், கருணாநிதி நினைவிடத்தில், அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அழகிரி ஆதரவாளர்களும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின், செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர் அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என கேள்வி எழுப்பினார்.



பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்; அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? - அழகிரி




பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்; அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குவார்களா? - அழகிரி


Next Story

மேலும் செய்திகள்